Translate

Saturday, 9 March 2019

மகாத்மா மௌனேஸ்வரர்

               

                                                  மகாத்மா மௌனேஸ்வரர்
                  சுமார் 800 ஆண்டுகட்கு முன் , கர்நாடக மாநிலம் குல்பர்க்கா ஜில்லா , கோனாலா எனும் கிராமத்தில் சேஷப்பா சேஷம்மா எனும் விஸ்வகர்ம தம்பதிகட்கு ஆதிலிங்கேஸ்வரஸ்வாமியின் அருளால் பிறந்தவர் மௌனேஷா எனும் மகான் .கல்வி கற்க , உரிய வயதில் இவரை ஒரு குருகுலத்தில் சேர்த் தார்கள் .பயிற்சி துவங்கு முன் , ஆசிரியர் இவரை " ஓம் " என்று சொல்லச் சொன்னார் .இவரோ , ஆசிரியரிடம் ' ' ஓம் ' ' எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்று கேட்க , பொருள் சொல்லத் தெரியாத ஆசிரியர் கோபமுற்று , இவரை அடிக்க கையை ஓங்கினார் .அந்தோ பரிதாபம் !ஓங்கிய கை அப்படியே நின்று விட்டது .உடனே ஆசிரியர் சிறுவனிடம் மன்னிப்புக் கேட்க , அவர் ஓம் எனும் சொல்லின் ( ஓங்காரம் ) பொருளைக் கூறி , ஆசிரியரின் கையை கீழே இறக்கி விட்டார் .அத்தோடு சிறுவன் மெளனேஷாவின் பள்ளிப்படிப்பு முடிவுற்றது .!மௌனேஷாவுக்கு நமது சம்பிரதாயப்படி , பூணூல் அணி விக்க ஏற்பாடு செய்யப்பட்டது .குல குருவானவர் வந்து சடங் குகளை செய்ய துவங்கியதும் , குருவின் உடலெல்லாம் தீப்பற்றி எரிவது போல இருந்தது .சிறுவன் மௌனேஷாவின் அருளால் மேற்படி எரிச்சல் அடங்கியது .வெறும் ஹோமம் செய்வதால் யாதொரு பயனும் இல்லை என்றும் , நம்மிடமுள்ள எல்லா தீய குணங்களையும் எரித்தாலொழிய நாம் பரிசுத்தமானவர்களாக முடியாதென்றும் மௌனேஷா அவருக்கு அறிவுரை கூறினார் .ஒரு சமயம் சிறுவன் மௌனேஷா , தன்னைப் போன்ற சிறுவர்களுடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தான் .அவர்க ளோடு சூராபூர் இளவரசனும் விளையாடினான் .சூராபூர் இளவரசன் தவறாக விளையாடியதோடு .மௌனேஷாவை தோற்று விட்டதாக கூறியதால் , இளவரசனை மௌனேஷா பந்தால் அடிக்க , அடிபட்ட இளவரசன் கீழே விழுந்து இறந்து போனான் .அதனால் சூராபூர் அரசன் மௌனேஷாவை தூக்கிலிடும்படி ஆணையிட்டான் .மௌனேஷாவைக் கண்டுபிடிக்க முடியாத தால் , அவனது பெற்றோரை தூக்கிலிடும்படி பணித்தான் .உடனே மெளனேஷா அங்கு தோன்றி , இளவரசன்தான் தவறு செய் தாளென்றும் , தீர விசாரிக்காமல் அரசன் தண்டனை தரலா காது என்றும் கூறி , வேண்டுமானால் இளவரசனையே கேட்டுப் பாருங்கள் என்று சொல்லி , இளவரசனை கூப்பிட்டான் , இள வரசனும் உயிர் பெற்றெழுந்து தான் செய்த தவறை ஒப்புக் கொண்டான் .அரசனும் மெளனேஷாவை வணங்கிப் போற்றி மன்னிப்புக்கேட்டான் .மகான் மெளனேஸ்வரா இவ்வாறாக சிறுவயது முதல் பல சித் து விளையாடல்களை நடத்தி , மக்களின் அறியாமையைப் போக்கவும் , மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் எல்லா மதங்களையும் சமமாக பாவிக்கவும் ஏராள மான உபதேசங்களை செய்து அருளியுள்ளார் .அதனால் முகம்மதியர்களும் அவரை ஒரு மகானாக மதித்துப் போற்றினர் .அப்போது பீஜப்பூர் நவாப் பாயிருந்த அடில்ஷா என்பவரும் அவரையே சரணடைந்து , மகான் மெளனேஷாவே , உலகில் தோன்றிய மகான்களுக்கெல் லாம் மேலானவர் என்று போற்றி புகழ்ந்துள்ளார் .தமது இறுதிக்காலத்தில் , மகான் மௌனேஷா கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள டிந்தானி எனும் இடத்தை தேர்ந் தெடுத்து யோக நிஷ்டையிலிருந்தார் .அங்கு கிருஷ்ணா நதி பின் நீரோட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பும் , பெரும் ஓசையும் அவருடைய மோனதவத்திற்கு இடைஞ்சலாயிருந்ததால் , சுமார் ஒரு மைல் சுற்றளவுக்குள் எவ்வித ஓசையுமின்றி மெதுவாக ஓடும்படி , கிருஷ்ணா நதிக்கு அவர் கட்டளையிட , கிருஷ்ணாவும் அதை ஏற்று மிகவும் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள் .இப்போதும் அவர் சமாதியடைந்த மௌனேஸ்வரா கோயிலின் அருகில் கிருஷ்ணா நதி அமைதியாக சென்று கொண்டிருப்பதை நாம் காணலாம் .

No comments: